Day: 3 August 2022

போதை இல்லாத உலகத்தை உருவாக்குவோம்

இன்றைய நவீன காலத்தை பொறுத்தவரையில் இந்த உலகத்தையே ஆட்டிப் படைக்கும் ஒரு ஆட்கொல்லியாக போதைப்பொருள் பாவனை காணப்படுகின்றது. இதனால் வரும் பேராபத்தை சிலர் உணர்ந்தும் பலர் உணராமலும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி தம்மை தாமே அழித்துக் கொண்டு வருகின்றனர். வயதானவர்கள்தான்போதைப்பொருட்களை பாவிப்பவர்கள் என்ற காலம் முடிந்து தற்பொழுது எந்தவொரு வயது வித்தியாசமும் இன்றி பெரியவர்கள், சிறியவர்கள், வாலிபர்கள், யுவதிகள், ஆண்கள், பெண்கள் என்ற எந்த ஒரு வேறுபாடுமின்றி மிகவும் சாதாரணமாக அனைவரும் இந்த போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளனர்.போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் தீமைகள் எண்ணிலடங்காதவையாக காணப்படுகின்றன.அதிலிருந்து மக்களையும், எதிர் கால இளைஞர் சமுதாயத்தையும் பாதுகாப்பது காலத்தின் தேவையாக காணப்படுகிறது. நமது இலங்கை நாடு உட்பட ஏனைய உலக நாடுகளிலும் பல்வேறுபட்ட வித்தியாசமான போதைவஸ்துகள் தயாரிக்கப்பட்டும் விற்பனைசெய்யப்பட்டும் வருகின்றன.உதாரணமாக மதுபானம், புகையிலை, ஹெரோயின், அபின்,கஞ்சா,போதையை ஏற்படுத்தும் தடுப்பூசிகள், போதையை ஏற்படுத்தும் மாத்திரைகள், தூள் வகைகள் என கூறிக்கொண்டே போகலாம் காலம் போக போக இன்னும் இன்னும் வித்தியாசமான போதைவஸ்துகள் தயாரிக்கப்படும் என்பதில் எந்தவொரு ஐயமுமில்லை.இவ்வகையான போதைப்பொருட்கள் பல விதங்களிலும் பல வடிவங்களிலும் மக்கள் மத்தியில் நாளாந்தம் கைமாற்றம் செய்யப்பட்டும் விற்பனை செய்யப்பட்டும்…

Read more